ரூ.1.5 கோடி மோசடி செய்த 2 ரியல் எஸ்டேட் அதிபர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புது வீடுகள் கட்டித் தருவதாக 22 பேரிடம் சுமார் ரூ.1.5 கோடி வரை மோசடி செய்த 2 ரியல் எஸ்டேட்அதிபர்களைப் போலீசார் கைது செய்தனர்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீசந்த் பஜாஜ் மற்றும் அவருடைய மகன் ராஜேஷ் பஜாஜ் ஆகிய இருவரும்சென்னை-எழும்பூரில் உள்ள பாந்தியன் சாலையில் "பஜாஜ் ப்ரமோட்டர்ஸ்" என்ற வீடு கட்டும் கம்பெனியைத்தொடங்கி நடத்தி வந்தனர்.

இவர்கள் வேப்பேரியில் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கூறி 22 பேரிடம் சுமார்ரூ.1.5 கோடி வரை கறந்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரும் பணத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

இதையறிந்து, பாதிக்கப்பட்ட அப்துல் பாஷா மற்றும் ராமச்சந்திர ரெட்டி ஆகிய இரண்டு பேர் சென்னையில் உள்ளகிரைம் பிராஞ்ச் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் தலைமறைவான ஸ்ரீசந்த் பஜாஜையும், ராஜேஷ் பஜாஜையும் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சென்னைப்பெருநகர நீதிமன்ற நீதிபதி முன் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+