கோவை அருகே ரூ.8 லட்சம் மதிப்பு நகைகள் துணிகர கொள்ளை
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் அருகே ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.7.95 லட்சம் மதிப்புள்ளதங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோயம்புத்தூர் அருகே உள்ளது பெரியநாயக்கன் பாளையம். இங்குள்ள ஒரு நகைக் கடையில் இன்றுஅதிகாலை ஒரு கொள்ளைக் கும்பல் புகுந்தது.
நகைக் கடையின் ஜன்னல் கம்பிகளை அறுத்துக் கொண்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த தங்க,வைர நகைகளை கிலோ கணக்கில் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட தங்க நகைகளையும், சுமார் 25 கிலோ வெள்ளி ஆபரணங்களையும்அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு ரூ.7.95 லட்சம் என்று அந்த நகைக் கடையின் உரிமையாளர்கூறினார்.
இது தொடர்பாக பெரியநாயக்கன் பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக மோப்ப நாயின்உதவியுடன் சம்பவம் நடத்தில் விசாரணை நடத்திய தனிப் படை போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
-->