Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவிரிக் கூட்டம்: ஜெயலலிதா பங்கேற்பாரா?

Subscribe to Oneindia Tamil

ஹூப்ளி:

வரும் 29ம் தேதி நடக்கும் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என நம்புவதாக கர்நாடகமுதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.

ஹூப்ளியில் நிருபர்களிடம் பேசிய அவர், காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க டெல்லியில் பிரதமர் தலைமையில் அந்தக் கூட்டம்நடக்கிறது.

இரு மாநிலங்களிலும் உள்ள நீரின் அளவு குறித்தும், பயிர்களின் நிலை குறித்தும் ஆராயுமாறு கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டிருந்தார். கண்காணிப்புக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துவிட்டது. இதன் பின்னர் நடக்கப் போகும்முதல் ஆணையக் கூட்டம் இது என்பதால் அதை நான் மிக நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்கிருஷ்ணா.

ஆனால், நேற்று நடந்த கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் வழங்க கர்நாடகம் மறுத்துவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தின் சம்பா சாகுபடியை ஒழுங்காக முடிக்க முடியுமா என்ற கவலை விவசாயிகளை ஆட்டஆரம்பித்துள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாக மழையும் நின்றுவிட்டது. இதனால் மிக வேகமாக நிரம்பி வந்த மேட்டூர்அணையின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்துவிட்டது. இப்போது அயிைல் 61.40 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,959அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து காவிரி பாசனப் பகுதிகளுக்கு 7,707 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

காவிரி ஆணையத்தையும் பிரதமர் வாஜ்பாயையும் தமிழகம் மதிக்கத் தவறியதாக உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவைக் கண்டித்ததுகுறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆணையம் மற்றும் பிரதமர் மீது முழு நம்பிக்கை இருப்பதாக ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

இந் நிலையில் வாஜ்பாய் கூட்டும் ஆணையக் கூட்டத்தில் ஜெயலலிதா நிச்சயம் பங்கேற்பார் என்றே தெரிகிறது.

வீரப்பன் விவகாரம்:

ஹூப்ளியில் பேசிய கிருஷ்ணா வீரப்பன் விவகாரம் குறித்தும் விளக்கம் தந்தார். கொளத்தூர் மணியை தூதராக அனுப்ப மாநிலஅரசு முழு முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறிய அவர், மணி மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறவும் அரசு முயன்றுவருவதாகக் கூறினார்.

கொளத்தூர் மணியை 12 நாட்களுக்குள் காட்டுக்குள் அனுப்ப வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு வீரப்பன் கெடு விதித்துஇன்றுடன் 5 நாட்கள் ஓடிவிட்டன. இதுவரை மணியை அனுப்புவது குறித்து கர்நாடகம் பேசித் தான் வருகிறதே தவிர வேறெந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.

வீரப்பனுக்கு ரூ. 20 கோடி தரப்பட்டதாக கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. தினகர் எழுதியுள்ள புத்தகத்தை தடை செய்யும் திட்டம்ஏதும் அரசிடம் இல்லை எனவும் கிருஷ்ணா தெரிவித்தார்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+