ஜி.கே. மணியை விசாரிக்க கோரி போலீசார் கோர்ட்டில் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே. மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னைகோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வந்த மணி சென்னைஎழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவருடைய சரண் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி தருமாறு கோரி எழும்பூர் 14-வதுகுற்றவியல் கோர்ட்டில் போலீஸார் மனு செய்துள்ளனர்.
இதற்காக மணி கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். தன் மீது போலீஸார் தொடர்ந்துள்ள வழக்குகள் அரசியல்உள்நோக்கம் கொண்டவை என்று அப்போது செய்தியாளர்களிடம் மணி கூறினார்.












Click it and Unblock the Notifications