திருச்சியில் மின் தடை: பொதுமக்கள் சாலை மறியல்- போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சி விமான நிலையம் அருகே நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களைபோலீஸார் தடியடி நடத்திக் கலைத்ததால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர், பாரதி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மின்சாரம் இல்லை.

இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். மாணவ, மாணவியர் படிக்க முடியாமல்தவித்தனர். கொசுத் தொல்லை வேறு மக்களை ஆட்டிப் படைத்து வந்தது.

மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் என பலரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திருச்சி-புதுக்கோட்டைசாலையில் மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

அதிகப் போக்குவரத்து உள்ள இந்த சாலையில் மறியல் டந்ததால், சாலைப் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த போலீஸார், பொதுமக்களைக் கலைந்து போகக் கூறினர். ஆனால் அவர்கள் கலைந்துபோக மறுத்தனர்.

இதையடுத்து தடியடி நடத்தப்பட்டது. மறியல் நடத்திய மக்களைப் போலீஸார் கண்மூடித் தனமாகத் தாக்கினர்.கலைந்து ஓடியவர்களைத் துரத்தித் துரத்தி போலீசார் லத்தியால் அடித்து உதைத்தனர். சிலருக்கு இதில் காயம்ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது.

மறியல் மற்றும் போலீஸ் தடியடி காரணமாக அந்த சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்குப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+