For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவை சந்திக்க புதிய கட்டுப்பாடுகள்: தமிழக அரசு நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்திக்க புதிய கட்டுப்பாடுகள்போடப்பட்டுள்ளன.

முன்பெல்லாம் அவரை எளிதாக சந்திக்க முடிந்தது. சராசரியாக 60 பேர் வரை அவரை தினமும் சந்தித்து வந்தனர். ஆனால்,இப்போது இதில் விதிமுறைகள் அமலாகியுள்ளன. ஒரே நேரத்தில் 3 பேர் மட்டுமே அவரைச் சந்திக்கலாம் என்று சிறைத்துறைபுதிய கட்டுப்பாட்டைப் போட்டுள்ளது.

இதுவரை ஜெயிலர் அறையில் தான் பார்வையாளர்களை வைகோ சந்தித்து வந்தார். ஆனால், இப்போது அதற்குப் பதிலாகஇன்னொரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் வைகோ தவிர ஜெயிலருக்கும் நாற்காலி போடப்பட்டுள்ளது.

வைகோவை இனி நேரடியாக இந்த அறையில் யாரும் சந்திக்க முடியாது. அவருக்குப் போடப்பட்டுள்ள நாற்காலிக்கு எதிரே 4அடி உயரத்தில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த சுவர் கிட்டத்தட்ட 2 அடி அகலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரின்வெளியே 3 நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதில் அமர்ந்து தான் வைகோவுடன் யாரும் பேச முடியும்.

இதனால் வைகோவை நெருங்கி யாரும் பேசிவிட முடியாது.

இந்த அறையில் வெளிப்படையாக ஒரு கேமராவும், மறைவாக பல காமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் பேசுவதைஒட்டு கேட்கும் மைக்குகளும் சுவர்களில் புதைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

வைகோவை எளிதாக யாரும் சந்திக்க முடியாத அளவுக்கு ஏன் புதிதாக இந்தக் கட்டுப்பாடுகள் என்று சிறை அதிகாரிகளிடம்கேட்டபோது, எல்லாம் மெட்ராஸ்ல இருந்து வந்த ஆர்டர்ங்க என்று பதிலளித்தனர்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X