தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது: காஞ்சி சங்கராச்சாரியார்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
"தலித்" என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று காஞ்சிசங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
இது தொடர்பாக விழுப்புரத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஆதி திராவிடர்கள் என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் எந்தக் கோவிலுக்குள்ளும் அனுமதிப்போம். அவர்கள்இந்துக்களில் ஒரு அங்கம்.
அவ்வாறு ஆதி திராவிடர்களுக்கு கோவில்களில் அனுமதி மறுக்கப்பட்டால், நானே வழக்கு தொடர்ந்துஅனுமதிக்க வைப்பேன்.
ஆனால் "தலித்" என்று கூறிக் கொண்டு வரும் யாரையும் கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது. "தலித்" என்றுவருபவர்கள் அனைத்து உரிமைகளையும் இழக்கிறார்கள் என்றார் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
-->












Click it and Unblock the Notifications