தருமபுரி அருகே நக்சலைட் வேட்டை தொடர்கிறது: டி.ஜி.பி. நேரில் ஆய்வு
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. தேடுதல்வேட்டையை தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் இன்று நேரில் பார்வையிட்டார்.
ஊத்தங்கரை, சென்றாயன் மலை, துலுக்கம்பட்டி மலை ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகளைத் தேடும் வேட்டைதொடர்ந்து நடந்து வருகிறது.
இதை நேரில் பார்வையிடுவதற்காக சென்னையிலிருந்து நெய்ல்வால் தருமபுரி சென்றார். அங்கு காட்டுப்பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருப்பதை அவர் நேரடியாகப் பார்வையிட்டார்.
பின்னர் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கும் அல்-உம்மா மற்றும் பிற தமிழ்த் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை.ஆனால் ஆந்திர மாநில நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம்.
இருந்தாலும் இதுகுறித்த விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே இதைப் பற்றியமுழு விவரமும் தெரிய வரும்என்றார் நெய்ல்வால்.
மேலும் மண்டல ஐ.ஜி. நரேந்திர பால் சிங், டி.ஐ.ஜி. தமிழ்ச்செல்வன், எஸ்.பி. பெரியய்யா உள்ளிட்டோர்தலைமையில் 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு நக்சலைட் வேட்டை நடந்து வருவதாகவும் நெய்ல்வால்குறிப்பிட்டார்.
-->












Click it and Unblock the Notifications