தமிழகத்தை வாட்டும் மூடுபனி
சென்னை:
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி வாட்டி வருகிறது.
பொதுவாக, மழைக்காலம் முடிந்த பிறகு ஜனவரி மாதத்திற்கு மேல் தான் மூடுபனி அதிக அளவில் இருக்கும்.ஆனால் மழைக்காலம் சரியாக முடிவடையாத நிலையில் நவம்பர் மாதத்திலேயே அதிக அளவில் பனிகொட்டுகிறது.
சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில்பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் காலை 9 மணி வரையிலும் கூட பனி விலகாமல் உள்ளது.
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை 9 மணி வரையிலும் எதிரில்இருப்பவர்களே தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனி கடுமையாக இருக்கிறது.
இரவு முழுவதும் அதிக அளவில் பெய்யும் பனி, காலையிலும் நீடிப்பதால் வயதானவர்கள், குழந்தைகள்,ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது வழக்கத்திற்கு மாறான மூடுபனி என்ற போதிலும் இதனால் பருவ மழை பாதிக்கப்படாது என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
-->












Click it and Unblock the Notifications