இப்தார் விருந்து: கருணாநிதி இன்று பங்கேற்பு
சென்னை:
தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் விருந்து நிகழ்ச்சியில் திமுக தலைவர்கருணாநிதி இன்று கலந்து கொள்கிறார்.
சென்னை எழும்பூரில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில இந்த இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இப்தார் விருந்து நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கருணாநிதிஅழைக்கப்பட்டுள்ளார்.
இதில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஏ.ராஜா, திமுக அமைப்புச்செயலாளர் ரஹ்மான் கான் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் மகளிர் அணி சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் விருந்துநிகழ்ச்சியில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டதுகுறிப்பிடத்தக்கது.
காவிரி உள்ளிட்ட சில பிரச்சனைகள் காரணமாக இந்த ஆண்டு இப்தார் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லைஎன்று முதல்வர் ஜெயலலிதா கூறியதும் நினைவிருக்கலாம்.
-->