காவல் நிலைய பாலியல் பலாத்காரம்: 10 போலீசாருக்கு தண்டனை உறுதி
சென்னை:
சிதம்பரம் காவல் நிலையத்தில் கடந்த 1994ம் ஆண்டு பத்மினி என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவழக்கில், 10 போலீசாருக்கு கடலூர் நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம்உறுதி செய்துள்ளது.
சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண் பத்மினியை கடந்த 1994ம் ஆண்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் வைத்தே 10போலீசார் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதுவும் பத்மினியின் கணவருடைய கண் முன்னாலேயே இந்தக்கொடுமையான சம்பவத்தில் போலீசார் ஈடுபட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த 10 போலீசாரும் கைது செய்யப்பட்டு அவர்கள்மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், 10 போலீசாருக்கும் தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துதீர்ப்பளித்தது.
படிப்பறிவில்லாத பத்மினி போலீசாரின் மிரட்டல்களைக் கண்டு அஞ்சாமல் வெகு துணிச்சலுடன் எதிர்த்து நின்றுபோராடினார். அவருக்கு வழக்கறிஞர்களும், மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அனைத்து வகையிலும் உதவினர்.
இதனால் தான் பத்மினியை பாலியல் பலாத்காரம் செய்த போலீசாருக்கு தண்டனை வாங்கித் தர முடிந்தது.
இதற்கிடையே தண்டனையை எதிர்த்து 10 போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தினகர் மற்றும் நீதிபதி கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடலூர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. மேலும் 10 போலீசாரின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-->












Click it and Unblock the Notifications