நாடாளுமன்ற குளத்தில் தவறி விழுந்த திருநாவுக்கரசர்!
டெல்லி:
மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திருநாவுக்கரசர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு சிறியகுளத்தில் தவறி விழுந்ததைத் தொடர்ந்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் பொன் விழாவையொட்டி அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து நின்றவாறு புகைப்படம் எடுக்கமுடிவு செய்யப்பட்டது.
இதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஒரு பிரம்மாண்டமான இடத்தில் அனைத்து உறுப்பினர்களும் கூடினர்.
அப்போது பரபரப்புடன் வந்த திருநாவுக்கரசர் அங்கிருந்த ஒரு சிறிய குளத்தில் தவறி விழுந்து விட்டார்.
திருநாவுக்கரசர் தவறி விழுந்தது தெரிந்ததுமே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள்என்னவோ, ஏதோ என்று நினைத்துக் கொண்டு குளத்தின் அருகே ஓடி வந்தார்கள்.
ஆனாலும் முழுக்க விழுந்து நனைந்து விடாமல் சமாளித்து நீருக்குள்ளேயே தடுமாறி எழுந்து நின்றார். குளத்தில்ஒரு அடி உயரமே நீர் இருந்தால் அவருடைய வேஷ்டி மட்டும் சிறிது நனைந்து விட்டது.
ஓடி வந்த பாதுகாப்பு அதிகாரிகள் திருநாவுக்கரசர் குளத்தை விட்டு வெளியே வருவதற்கு உதவினார்கள்.அவருடைய கையைப் பிடித்து ஒரு அதிகாரி தூக்கி விட்டார்.
இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த சில அமைச்சர்களும், எம்.பிக்களும் லேசாகப் புன்னகைத்துக்கொண்டனர்.
-->












Click it and Unblock the Notifications