சாலையோரங்களில் மரம் நடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
46-வது தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியின் போது ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு விட்டதால்,புதிய மரக் கன்றுகளை தமிழக அரசு நட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ஞானேஸ்வரன் என்பவர் தொடர்ந்துள்ள ரிட் மனுவில்,
தேசிய நெடுஞ்சாலை எண் 46 அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியை இரண்டு தனியார் நிறுவனங்கள்ஏற்றுள்ளன.
ரூ.163.49 கோடி செலவில் நடைபெறும் இந்தப் பணியின்போது சாலையோரம் இருந்த 50,000க்கும் மேற்பட்டமரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இவற்றில் பெரும்பாலானவை 30 வயதையும் கடந்தவை.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புதிய மரக்கன்றுகளை சாலையோரம் நட வேண்டியது தமிழக அரசின் கடமையாகிறது.
ஆகவே பள்ளிகொண்டாவிலிருந்து வாணியம்பாடி வழியாக கிருஷ்ணகிரி வரை 100 கிலோமீட்டர் தொலைவுக்குசாலையின் இரு மரங்கிலும் மரக் கன்றுகள் நட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில்கோரியிருந்தார்.
இந்த மனுவை பரிசீலித்து, விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன்ஆகியோர் அடங்கிய பெஞ்ச், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
-->