தினகர் மீது வழக்குப் போட மாட்டேன்: கருணாநிதி
சென்னை:
தனது வீட்டில் வைத்து வீரப்பனுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக கர்நாடக மாநில முன்னாள் டி.ஜி.பி.கூறியிருப்பதை எதிர்த்து வழக்குத் தொடரப் போவதில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தனியார் டி.வி. ஒன்றுக்கு தினகர் அளித்த பேட்டியின் போது வீரப்பன் விவகாரத்தில் என்னிடம் பணம்தரப்படவில்லை என்றும், ஆனால் என் வீட்டில் உள்ள ஒருவரிடம் பணம் தரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"அந்த நபர் யார்? ஸ்டாலினா?" என்று பேட்டியாளர் கேட்டபோது, யார் என்பதை எனது வாயிலிருந்து பிடுங்கமுடியாது என்று தினகர் கூறியுள்ளதாக அறிந்தேன்.
தினகர் கூறியபடி என் வீட்டு வாசலில் ஏதேனும் பணம் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டுப் பார்க்கவேண்டும்.
தினகர் குறித்து அத்தனை பேருக்கும் நன்றாகவே தெரியும். எனவே அவர் மீது வழக்குப் போடும் எண்ணம்எதுவும் இல்லை என்றார் கருணாநிதி.
-->