ரெய்டில் சிக்காத திமுகவினர்
சென்னை:
இதுவரை சுமார் 10 திமுக தலைவர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்றிருந்தாலும், இக்கட்சியின் தலைவர்கருணாநிதி உள்ளிட்ட பல முக்கியமான மாஜி அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுவரைசோதனை போடவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவு கருணாநிதியின் வீட்டுக்குச் சென்ற போலீசார் அவரைக் கைதுசெய்தார்களே தவிர, அவருடைய வீடுகளில் சோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை.
ஆனாலும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கும் இந்தக் கைது நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை. மேம்பால ஊழல்வழக்கு தொடர்பாகவே கருணாநிதி கைது செய்யப்பட்டிருந்தார்.
கருணாநிதி தவிர ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி, தா. கிருஷ்ணன், தமிழ்க்குடிமகன், ரகுமான்கான், ஆலடிஅருணா, கே. சுந்தரம், கே. பிச்சாண்டி, முல்லை வேந்தன், செங்குட்டுவன், சற்குணபாண்டியன் ஆகியோர் வீடுகளைஇதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடவில்லை.
இவர்களில் தமிழ்க்குடிமகன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்து விட்டார். முல்லை வேந்தன்கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு விட்டார்.
மேலும் திமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், துணை சபாநாயகராக இருந்த பரிதிஇளம்வழுதி ஆகியோரும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் இன்னும் சிக்கவில்லை.
முன்னாள் திமுக அமைச்சர்கள் அன்பழகன், துரைமுருகன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ்,சமயநல்லூர் செல்வராஜ், சுரேஷ் ராஜன், ஜெனிபர் சந்திரன், மதுரை மாநகர முன்னாள் திமுக மேயர் குழந்தைவேலுஆகியோரின் வீடுகளிலும் இடங்களிலும் தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் வருமானத்திற்கு அதிகமாக கோடிக் கணக்கில் சொத்துக்களைக் குவித்துள்ளனர்என்றும், இதற்கெல்லாம் ஆதாரங்களும் உள்ளன என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. திலகவதி சமீபத்தில்தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications