கழுத்தை நெறித்து டிரைவர் கொலை: மனைவி கைது
சென்னை:
இன்னொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த ஒருவரை அவருடைய மனைவி கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார்.
சென்னை-அண்ணா நகர், கீழ்நெடுங்கரையில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் துரை (45).லாரி டிரைவரான இவருக்கு தேவி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
துரைக்கு இதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்தது.
தான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பிரேமாவுக்கே வாரி இறைத்து விட்டு, குடி போதையில் தேவியிடம் பணம்கேட்டுத் தொல்லை கொடுப்பாராம் துரை.
பணம் இல்லையென்று தேவி கூறினால், துரை அவரை நன்றாக அடித்து உதைத்து துன்புறுத்துவதும் அன்றாடம்நடைபெறுமாம். துரையின் இந்தக் கொடுமைகளைத் தன் பிள்ளைகளுக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் தேவியின் பொறுமை நேற்று எல்லை கடந்தது. மீண்டும் குடித்து விட்டு வந்து தேவியை சராமாரியாகஅடிக்கத் தொடங்கினார் துரை.
தேவியோ சும்மா இருக்கவில்லை. வீட்டில் ஓரத்தில் கிடந்த மின்சார வயரை எடுத்து துரையின் கழுத்தில் சுற்றிஇறுக்கினார். இதில் துரை துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்திற்குச் சென்று தேவி சரணடைந்தார். துரையின் உடலைப் போலீசார்கைப்பற்றி தேவியின் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications