பஸ் பயணியிடம் ரூ. 50,000 ஜேப்படி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பஸ்சில் பயணித்த பயணியிடம் ரூ. 50,000 பணம் திருடப்பட்டது.
திருவண்ணாமலை அருகே உள்ள தும்பூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் சண்முகம். சென்னை கொரட்டூர் பகுதியில்உள்ள தனது உறவினர் வீட்டுக்கு பணம் வாங்க வந்தார் சண்முகம்.
பின்னர் உறவினரிடம் ரூ. 50,000 பணம் பெற்றுக் கொண்டு பாடி பகுதிக்கு நகரப் பேருந்தில் கிளம்பினார். பஸ்சில்பயணம் செய்தபோது, அவர் வைத்திருந்த பையை அறுத்து அதிலிருந்த ரூ. 50,000 பணத்தை திருடிவிட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் சண்முகம்.
-->












Click it and Unblock the Notifications