சர்ச்சில் போடப்பட்ட குழந்தை தாயிடம் சேர்ந்தது
சேலம்:
சர்ச் வளாகத்தில் போடப்பட்டிருந்த 9 மாத ஆண் குழந்தை அதனுடைய தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சேலம் நகரில் உள்ள கிறிஸ்தவ தோலயத்தின் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு ஆண் குழந்தைகிடந்தது. இதைப் பார்த்த சர்ச் நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
அனாதரவாக விடப்பட்ட குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு பெண் காவல்நிலையத்துக்கு வந்தார். அது தனது குழந்தை தான் எனவும் குடும்பத்தில் வறுமை காரணமாக வேறு வழியில்லாமல்குழந்தையை சர்ச்சில் போட்டு விட்டுச் சென்றதாகவும் கூறினார்.
இதையடுத்து அவர் மீது பரிதாபப்பட்ட சர்ச் நிர்வாகிகள், தாங்கள் நடத்தும் பள்ளியிலேயே அந்தப் பெண்ணுக்குவேலை போட்டுக் கொடுக்க முன் வந்தனர்.
அந்த ஊதியம் வந்தால் குழந்தையை தன்னால் காப்பாற்ற முடியும் என அப் பெண் கூறியதையடுத்து சிசுவைஅவரிடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இக்கட்டான நிலையில் இருந்த பெண்ணுக்கு உடனே உதவ முன் வந்த அந்த தேவாலயத்தின் நிர்வாகிகளை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர்.
-->












Click it and Unblock the Notifications