கெடுவை நீட்டிக்க வீரப்பனுக்கு கர்நாடகம் கோரிக்கை
பெங்களூர்:
நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை காட்டுக்குள் அனுப்புவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் கெடுவை நீட்டிக்குமாறுவீரப்பனுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சர் ராஜு கெளடா மூலமாக இந்தக் கோரிகையை கர்நாடக அரசு முன் வைத்துள்ளது. ரேடியோ மூலமாக அவர் இக்கோரிக்கையை வீரப்பனுக்கு அனுப்பினார். ராஜு கெளடாவின் இந்தப் பேச்சு பெங்களூர், மைசூர், திருச்சி, கோவை ஆகிய 4வானொலி நிலையங்கள் மூலமாக தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
ரேடியோ செய்தியில் ராஜூ கெளடா பேசியிருப்பதாவது:
கொளத்தூர் மணி விடுதலையாவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களைக் கடந்து நாகப்பாவை மீட்பதற்காக கொளத்தூர்மணி உன்னை (வீரப்பன்) சந்திக்க வர உள்ளார்.
அவர் உன்னிடம் வருவதற்கு வசதியாக நீ விதித்த கெடுவை நீட்டிக்க வேண்டும். மணி வரும் வரை நாகப்பாவை ஏதும்செய்துவிடாதே.
இவ்வாறு ரேடியோ மூலம் ராஜூ கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.
12 நாட்களுக்குள் கொளத்தூர் மணியை தூது அனுப்பாவிட்டால் நாகப்பாவின் தலையைத் துண்டிப்பேன் என்று வீரப்பன்மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கேசட் கடந்த 21ம் தேதி நாகப்பா குடும்பத்துக்கு வந்து சேர்ந்தது.
இந்தக் கெடு 2ம் தேதியுடன் முடிவடைவதால் கர்நாடக அரசும், நாகப்பாவின் குடும்பத்தினரும் பெரும் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.
வீரப்பனுக்கு ரேடியோ செய்தி வெளியிட்ட அமைச்சர் ராஜூ கெளடா அரசியல்ரீதியில் நாகப்பாவின் நம்பர் ஒன் எதிரியாவார்.கடந்த தேர்தலில் நாகப்பாவைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார் ராஜூ கெளடா.
ராஜூ கெளடா வீரப்பனின் ஆள் என முன்பு அடிக்கடி குற்றம் சாட்டி வந்தார் நாகப்பா என்பது நினைவுகூறத்தக்கது.
இந் நிலையில் ராஜூ கெளடாவை வைத்தே வீரப்பனுக்கு கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உயர் மட்டக் கமிட்டி கூட்டம்:
இதற்கிடையே வீரப்பன் விவகாரம் குறித்து இன்று கர்நாடக உயர் மட்டக் கமிட்டி ஆலோசனை நடத்தியது.
இதில் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, டி.ஜி.பி. மடியாள், பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு, ஏ.டி.ஜி.பி. சீனிவாசன்,உளவுப் பிரிவு டி.ஜி.பி. பானர்ஜி உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
-->












Click it and Unblock the Notifications