கோயம்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
சென்னை:
கோயம்பேடு பேருந்து நிலையத்தை எளிதில் அடைய உதவும் வகையில் வளசரவாக்கம் பகுதியிலிருந்து போரூர்வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர்ப் பேருந்துகள் தற்போது கிண்டி கத்திப்பாராசந்திப்பு வழியாக 18 கிலோமீட்டர் தூரத்தைச் சுற்றிக் கொண்டு பஸ் நிலையத்தை அடைகின்றன.
ஆனால் போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையில் வந்தால் 6 கிலோமீட்டர்தூரம்தான். ஆனால், இந்தச் சாலை முழுவதும் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு பஸ்கள் எதிரெதிரே போவதற்குக் கூட இடமில்லை. எனவே இந்தப் பகுதியில் உள்ள சாலையோரஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வளசரவாக்கம் பகுதியில் முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
ஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்றன. இதனால் அவற்றை அகற்றகடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.
இப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
புல்டோசர்கள் மூலம் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பிற அமைப்புகளைஅதிகாரிகள் இடித்துத் தள்ளி வருகின்றனர்.
இந்தப் பணி போரூர் வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-->












Click it and Unblock the Notifications