For Daily Alerts
Just In
2ம் தேதி அன்னை தெரசா பல்கலை பட்டமளிப்பு விழா
சென்னை:
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா வரும்டிசம்பர் 2ம் தேதி நடக்கிறது.
சென்னை கலைவானர் அரங்கத்தில் இந்த விழா நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக வேந்தரும்,ஆளுநருமான ராம்மோகன் ராவ் தலைமை தாங்குகிறார்.
முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சமூகவியல், கம்யூட்டர் சயின்ஸ், ஆங்கிலம், கல்வி, பொருளாதாரம், குடும்ப வாழ்வியல்,வரலாறு ஆகிய துறைகள் உள்ளன.
தொலைதூரக் கல்வி மூலம் எம்.சி.ஏ., எம்.எட் மற்றும் எம்.பில். உயர் கல்விகளையும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காகவே நடத்தப்படும் ஒரே பல்கலைக்கழகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
Comments
Story first published: Saturday, November 30, 2002, 5:30 [IST]