ஜி.கே.மணியை போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட் மறுப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணியை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை எழும்பூர்நீதிமன்றம் அனுமதி மறுத்து விட்டது. மாறாக சிறை வார்டன் முன்னிலையில் தான் அவரிடம் போலீசார்விசாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது.
செங்கல்வராயன் அறக்கட்டளை மோதல் விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் மணி சமீபத்தில் எழும்பூர்கோர்ட்டில் சரணடைந்தார். அவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி சென்னை வேப்பேரி காவல் நிலைய போலீசார்எழும்பூர் கோர்ட்டில் அனுமதி கோரியிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மணியை போலீஸ் காவலில் அனுப்ப மறுத்து விட்டது. அதேசமயம், மணிஅடைக்கப்பட்டுள்ள மத்திய சிறை வளாகத்திலேயே வைத்து சிறை வார்டன் முன்னிலையிலேயே வேப்பேரிஇன்ஸ்பெக்டர் மாணிக்கம் மணியை விசாரிக்கலாம் என கோர்ட் அனுமதி வழங்கியது.
போலீஸ் காவலில் மணியை அனுப்பினால் அவர் தாக்கப்படலாம் போன்ற அச்சம் எழுந்தது. போலீசார் அவரைதுன்புறுத்தலாம் எனவும் அஞ்சப்பட்டது.
இந் நிலையில் அவரை போலீஸ் காவலில் அனுப்ப நீதிமன்றமே மறுத்துவிட்டது.
-->