தமிழக கோவில்களை தகர்க்க பயங்கர சதி: 3 தீவிரவாதிகள் கைது
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான வரும் 6ம் தேதி தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களைத் தகர்க்கதீவிரவாதிகள் திட்டமிட்டிருந்த சதி அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் 2 தீவிரவாதிகளைப்போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதையடுத்து நாட்டின் பல்வேறு இடங்களிலும் பயங்கரக் கலவரங்கள் வெடித்தன. கோயம்புத்தூரில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்கள் தமிழகத்தையே கிடுகிடுக்கச் செய்தன.
இவற்றைத் தொடர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதி வந்து விட்டாலே தமிழகப் போலீசாரிடம் பதற்றம்தொற்றிக் கொள்ளும். பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், கோவில்கள் என்று மக்கள்கூடும் இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் போலீசார் ஈடுபடுவார்கள்.
அதே போலவே இந்த ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி நெருங்கி வருவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார்தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் சென்னையில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனைகளில் மூன்றுதீவிரவாதிகள் சிக்கினர்.
வண்ணாரப்பேட்டையில் தெளகிக், ஜாகீர் உசைன் என்ற இரண்டு தீவிரவாதிகளைப் போலீசார் கைது செய்தனர்.
"இஸ்லாமிய தீவிரப் படை" என்ற பெயரில் பல்வேறு நாசவேலைகளுக்கு திட்டமிட்டிருந்தது அவர்களிடம்நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரிய வந்தது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான பல கோவில்களையும் வரும் 6ம் தேதி குண்டு வைத்து தகர்க்க இந்தத்தீவிரவாதிகள் சதி செய்திருந்ததும் தெரிய வந்தது.
இவர்களுக்கு அல்-உம்மா தீவிரவாதிகள் மற்றும் ஆந்திர நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும்கூறப்படுகிறது. ஆந்திராவில் சமீபத்தில் சாய்பாபா கோவிலில் கடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருந்ததீவிரவாதிகளுடனும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இருந்தாலும் சென்னையில் பிடிபட்ட தீவிரவாதிகள் உண்மையிலேயே எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றவிவரம் உறுதியாகத் தெரியவில்லை.
இதற்கிடையே குடியாத்தம் அருகே பேரணாம்பட்டு பகுதியில் மற்றொரு தீவிரவாதியைப் போலீசார்பிடித்துள்ளனர். அப்துல் ரகுமான் என்ற இந்தத் தீவிரவாதியிடமிருந்து கம்ப்யூட்டர்கள், சிடிக்கள், கேசட்டுகள்உள்ளிட்ட நவீன ஆவணங்களையும் போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கருதப்படும் அப்துல் ரகுமான் ஒரு ஆசிரியர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
பிடிபட்ட மூன்று தீவிரவாதிகளையும் போலீசார் தொடர்ந்து நன்றாகக் "கவனித்து" வருகின்றனர். இதன் மூலம்மேலும் பல சதிகளும் அம்பலமாகும் என்று தெரிகிறது.
-->