இலங்கை: 3வது கட்ட அமைதிப் பேச்சு இன்று துவக்கம்
ஓஸ்லோ:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான 3வது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள்நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் இன்று முதல் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
சமீபத்திய "மாவீரர் தின" உரையின் போது, இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதைவலியுறுத்தி புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் பேசினார்.
தமிழர்களுக்கான சுயாட்சி கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்பட்டால் மீண்டும் நாங்கள் ஆயுதங்களைத் தூக்குவதைத்தவிர வேறு வழியே இல்லை என்றும் அவர் எச்சரித்தார்.
இந்த சுயாட்சி கோரிக்கை குறித்து தான் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் முக்கியமாகப் பேசப்படவுள்ளது.
புலிகளின் சார்பில் அதன் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் தலைமையிலான ஆறு பேர் கொண்டகுழுவினரும், இலங்கை அரசின் சார்பில் அரசியல் விவகாரத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரிஸ் தலைமையிலானகுழுவினரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்து இந்தியாவிடம் தெரிவிப்பதற்காக இலங்கை அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் கூட்டணி சார்பில் ஒரு குழுவினர் இன்று டெல்லி விரைகின்றனர்.
சந்திரிகாவின் சகோதரரான அனுரா பண்டாரநாயகே தலைமையில் இந்தக் குழுவினர் இந்தியா செல்கின்றனர்.
புலிகளுக்கு இலங்கை அரசு அளவுக்கு மீறி அதிகாரங்களை அளித்துக் கொண்டிருப்பதாக அவர்கள்இந்தியாவிடம் புகார் கூறவுள்ளனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மற்றும் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின்மனைவியும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோரை இந்தக் குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள சில உள்கட்சி விவகாரம் தொடர்பாகஅக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ரப் ஹக்கீம் ஓஸ்லோ பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளாமலேயே கொழும்புதிரும்பினார்.
வடக்கு, கிழக்கு இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் பிரச்சனைகள் குறித்து எடுத்துக் கூறுவதற்காகவே இலங்கைஅரசு தரப்புக் குழுவில் ஹக்கீம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.