For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள வாஜ்பாய் நிபந்தனை

By Staff
Google Oneindia Tamil News

சோலன் (ஹிமாச்சலப் பிரதேசம்):

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால் தான் அந்நாட்டில் நடக்கவுள்ள சார்க்மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று பிரதமர் வாஜ்பாய் கூறினார்.

ஹிமாச்சலப் பிரதேசம் சோலனில் அமைக்கப்பட்டுள்ள "மோகன் சக்தி ஹெரிட்டேஜ் பார்க்" என்ற சுற்றுலாஸ்தலத்திற்கு அடிக்கல் நாட்டி வாஜ்பாய் பேசுகையில்,

காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் மற்றும் ஜம்மூவில் உள்ள ரகுநாத் கோவிலைத் தாக்கியபாகிஸ்தான் பயங்கரவாதிகள் மேலும் இந்தியாவின் பல கோவில்களைத் தாக்க சதி செய்துள்ளனர்.

மதவாதத்திற்கு இடம் கொடுக்காத இந்தியாவில் மதவாத மோதலைத் தூண்டிவிடுவதற்காகவே கோவில்களைக்குறி வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர்.

ஆனால் அவற்றையெல்லாம் இந்தியா சமாளித்து பயங்கரவாதத்தைக் கூண்டோடு அழிக்கும். பயங்கரவாதத்தால்எங்கள் நாட்டைத் துண்டாட பாகிஸ்தானால் முடியாது.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் முற்றிலுமாக, உடனடியாக நிறுத்திக் கொண்டால் தான்அந்நாட்டில் நடக்கவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வேன்.

போக்ரானில் கடந்த 1998ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்திய போது பல்வேறு நாடுகள் இந்தியாவுக்குநெருக்கடி அளித்தன. பாதுகாப்புக்கு நாங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் சோதனை நடத்துகிறீர்கள் என்றும் சிலநாடுகள் கேட்டன.

பாதுகாப்பு என்ற ஒன்று தேவைப்படும் போது அவர்கள் வராவிட்டால் என்ன செய்வது? அதற்காகத் தான்அணுகுண்டு சோதனை நடத்தினோம் என்று பேசினார் வாஜ்பாய்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X