ரஷ்ய அதிபர் புடின் இன்று இந்தியா வருகை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

கடந்த இரு நாட்களாக சீனாவில் இருந்த அவர் இந்தியா வருகிறார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மேலும் பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும் மிக முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. கிட்டத்தட்ட 350பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து புடினும் வாஜ்பாயும் பேச்சு நடத்துவர்.

அவாக்ஸ் ரக ரேடார் விமானங்களை இந்தியாவுக்கு விற்பது, டீசல் நீர் மூழ்கிகளை இந்தியாவிலேயே தயாரிப்பது, 2010 வரைஇந்திய- ரஷ்ய பாதுகாப்பு ஒப்பந்தத்தை நீட்டிப்பது, கிராஸ்கோவ் விமானம் தாங்கிக் கப்பலை இந்தியாவுக்கு வழங்குவது,டியூ-22 ரக குண்டு வீச்சு விமானங்களைத் தருவது, அகுலா-2 ரக அணு நீர்மூழ்கிகளை இந்தியாவுக்குத் தருவது ஆகியவைகுறித்து பேச்சு நடத்தப்படும்.

மேலும் இரு நாடுகளும் சேர்ந்து நவீன ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவது குறித்து ஆலோசிக்க உள்ளனர். இதில் பலஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு பிரதமர் வாஜ்பாயும், அதிபர் புடினும் கையெழுத்திட உள்ளனர்.

ரஷ்ய ஆயுத ஏற்றுமதியில் 40 சதவீதம் இந்தியாவுக்குத் தான் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இந்தியப் பயணத்தை ஒட்டி புடின் அளித்த சிறப்பப் பேட்டியில், பாகிஸ்தானை கடுமையாகத் தாக்கியிருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+