சாக்கடையில் பிணமாக மிதந்து வந்த பெண் குழந்தை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பெண் சிசுக்களை விஷம் வைத்தும், வாயில் நெற்கதிர்களை வைத்தும் கொன்றது போய், இப்போது சாக்கடையில்ஹாயாக போட்டு விட்டுச் செல்லும் அளவுக்கு நிலைமை மிகவும் கொடூரமாகப் போய்விட்டது.

மதுரை அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி அருகே வைகை ஆற்றுக் கல்பாலம் உள்ளது.

அந்தப் பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் ஏதோ ஒன்று மிதந்து வருவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் என்னஎன்று உற்றுப் பார்த்தபோது அவர்களது நெஞ்சே அடைத்து விட்டது.

சாக்கடையில் மிதந்தபடி வந்தது ஒரு பெண் குழந்தையின் உடல். பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசி விட்டுச்சென்ற அந்தக் கொடூரத் தாயின் முகம் தெரியாத நிலையிலும், கொடிய மனம் படைத்த அந்தப் பெண்ணை மக்கள்நன்றாகத் திட்டித் தீர்த்தனர்.

இருந்தாலும் சாக்கடையில் வெகு நேரமாகக் கிடந்த அந்த பெண் குழந்தையின் உடலை எடுக்க யாருக்குமே மனம்வரவில்லை. அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சிலர் தகவல் கொடுத்தனர்.

ஆனால் நெடு நேரம் வரை போலீஸார் யாரும் அங்கு வரவில்லை. அப்பகுதியில் வருவோரும் போவோரும் பெண்குழந்தையின் இறந்த உடலை ரத்தக் கண்ணீர் வடிக்காத குறையாகப் பார்த்துச் சென்றனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+