For Daily Alerts
Just In
பாண்டிச்சேரி அதிமுக அலுவலகத்துக்கு மின் இணைப்பு துண்டிப்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அதிமுக அலுவலகம் கடந்த 7 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் கட்சிஅலுவலக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கமாகவே எல்லா கட்சிகளும் இந்த மோசடியைச் செய்வது உண்டு. ஆனால், பாண்டிச்சேரியில்ஆளும் கட்சி உள்பட எல்லா கட்சிகளிலும் தவறாமல் மின் கட்டணத்தை வசூல் செய்துவிடுவார்கள்.
ஆனால், அதிமுக மட்டும் மின் கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்து வந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி மாநிலமின்வாரிய அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பிப் பார்த்தனர். ஆனால், எதற்கும் அதிமுக அசைந்துகொடுக்கவில்லை,
இதையடுத்து 7 மாத மின் கட்டணமான ரூ. 12,000 தொகையை கட்டினால் தான் மீண்டும் மின் இணைப்புதருவோம் என்று கூறி நேற்று கட் செய்துவிட்டனர்.
-->
Story first published: Thursday, December 5, 2002, 5:30 [IST]