தஞ்சையில் கைதான 3 தீவிரவாதிகளும் சென்னை சிறையில் அடைப்பு
சென்னை:
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டனத்தில் கைது செய்யப்பட்ட 3 இஸ்லாமிய தீவிரவாதிகளையும் 15 நாள் காவலில்வைக்க சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூவரும் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர்.
சென்னையில் சமீபத்தில் தவூபிக் மற்றும் ஜக்காரியா என்ற இரண்டு தீவிரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள்கொடுத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டனம் பகுதியில் பதுங்கியிருந்த இமாம்வலியுல்லா, காதர், நிஜாமுதீன் ஆகிய 3 தீவிரவாதிகள் பிடிபட்டனர்.
இவர்கள் இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
இவர்களிடமிருந்து 9 கிலோ எடையுள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.மல்லிப்பட்டனத்தில் கைது செய்யப்பட்ட இந்த 3 தீவிரவாதிகளையும் சேதுபாவா சத்திரம் காவல் நிலையத்தில்வைத்து போலீசார் அடித்து உதைத்து விசாரணை நடத்தினர்.
நேற்று சேதுபாவா சத்திரம் சென்ற சென்னை போலீசாரிடம் இந்த மூன்று பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.இதையடுத்து இந்த மூன்று பேரையும் போலீஸார் மிக பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னை கொண்டுவந்தனர்.
எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்கநீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-->












Click it and Unblock the Notifications