தமிழகம் முழுவதும் போலீசார் விடிய விடிய சோதனை
சென்னை:
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுவதால் அதைமுறியடிக்க சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்றிரவு முழுவதும் போலீசார் விடிய விடியவாகன சோதனைகளில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்துக்கிடமான வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
இன்றோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 வருடங்களாகிறது. இதையடுத்து தீவிரவாதிகள் நாச வேலைகளில்ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழகம் முவதிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
75,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர கமாண்டோக்கள், வெடிகுண்டுநிபுணர்களும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று இரவு முழுவதும் விடிய விடிய சென்னை நகரிலும் தமிழகத்தின் பிற நகரங்கள்,நெடுஞ்சாலைகளில் தீவிர வாகன சோதனைகள் நடந்தன.
முக்கிய சாலைகளில் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி அந்தப் பக்கமாக வந்த அத்தனை வாகனங்களையும்நிறுத்தி சோதனை போட்டனர். சந்தேகமான நபர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.சிலர் தொடர்ந்து காவல் நிலையங்களிலேயே வைக்கப்பட்டுள்ளனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.
-->












Click it and Unblock the Notifications