அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் தகராறு: விடுதலைச் சிறுத்தைகள்- பா.ஜ.க. மோதல்
திருச்சி:
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதுதொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சியினருக்கும், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பினருக்கும் கடும் மோதல் நடந்தது. இரு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டனர்.
அம்பேத்கரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. திருச்சி ரயில் சந்திப்பு அருகே உள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவிக்க விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் வந்திருந்தனர்.
அதே நேரத்தில் பாரதீய ஜனதாக் கட்சியினரும் அங்கு வந்தனர்.
அம்பேத்கரை கேவலமாகப் பேசியும் தலித்களை புறக்கணித்தும் வரும் பா.ஜ.கவினர் அவரது சிலைக்கு மாலைஅணிவிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் கூறினர்.
இதையடுத்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரின் கொடிகளும்கிழிபட்டன. சிலர் அடித்தும் கொண்டனர்.
உடனடியாக போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சு நடத்தினர். இரு கட்சியினரும் தனித் தனியாகமாலை போட உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், பா.ஜ.கவினர் மாலை அணிவித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் அதை எதிர்த்து ஆக்ரோஷமாக குரல்எழுப்பினர்.
-->












Click it and Unblock the Notifications