காஞ்சி மடத்தில் ஜாதிப் பாகுபாடு: எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்தில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு வேறு விடுதி இயக்கப்பட்டு வருவதைக் கண்டித்துபோராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
மத மாற்றத் தடை சட்டத்தை ஆதரித்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் தலித்கள் தொடர்பாக தெரிவித்த சில கருத்துக்கள் அந்தசமூகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் மீது வழக்குத் தொடரவும் புதிய தமிழகம்திட்டமிட்டுள்ளது.
மேலும் தலித் என்று சொல்லிக் கொண்டு யார் வந்தாலும் கோவிக்குள் விட மாட்டோம். ஆதி திராவிடர்களாகத் தான் அவர்கள் வரவேண்டும் என்றும் சங்கராச்சாரியார் கூறியிருப்பற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மதமாற்றத் தடை சட்டம் குறித்து அவர் பேசி வந்தாலும் தனது மடத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் கல்லூரியில் இரு விதமானஉணவகங்களும் விடுதிகளும் நடத்தப்படுவது குறித்து அவர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்க மறுத்து வருகிறார்.
உயர் ஜாதியினருக்கு ஒரு விடுதியும் மற்ற ஜாதியினருக்கு ஒரு விடுதியுமாக காஞ்சி மடம் இயக்குகிறது. அதே போலத்தான்உணவகங்களும் இரு விதமாக உள்ளன.
காஞ்சி மடத்தின் இச் செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுகூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மதமாற்றத் தடை சட்ட விஷயத்தில் ஒரு அரசியல்வாதியைப் போலவே சங்கராச்சாரியார் செயல்பட ஆரம்பித்துவிட்டார். இதில்அரசியல்வாதி போல பேசுகிறார். அறிக்கை விடுகிறார். கூட்டம் போடுகிறார்.
அதே சமயம் தான் நடத்தும் கல்லூரியில் பிராமணர்களுக்கு ஒரு விடுதியும் மற்ற ஜாதியினருக்கு ஒரு விடுதியும் நடத்தி வருகிறார்.
தலித்கள் மத மாற்றத்துக்குக் காரணமாக உள்ள வர்ணாசிரம தர்மம், தீண்டாமை குறித்து கேள்வி கேட்டால் மட்டும் வாய்திறக்கவே மறுக்கிறார் சங்கராச்சாரியார். மற்ற விஷயங்களில் தானாகவே முன் வந்து கருத்து சொல்லும் இவர் இதில் மட்டும்கேட்டாலும் பதில் சொல்லாமல் இருப்பது ஏன்?
இதை எதிர்த்து வரும் 9ம் தேதி காஞ்சிபுரத்தில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு நல்லகண்ணு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications