2 வழக்குகளில் ஜாமீன் கோரி கொளத்தூர் மணி இன்று மனு தாக்கல்
மைசூர்:
இரு வழக்குகளில் ஜாமீன் கோரி மைசூர் நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிட்டது. ஆனால், கொள்ளேகால் நீதிமன்றம்அவருக்கு ஜாமீன் தர மறுத்தது. அந்த வழக்கை மைசூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது.
ஏற்கனவே, மைசூர் நீதிமன்றத்தில் மணி மீதான இன்னொரு வழக்கும் விசாரணையில் உள்ளது.
இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி இன்று கொளத்தூர் மணியின் வழக்கறிஞர் பிரகாஷ் மனு தாக்கல் செய்தார். இந்தமனுக்கள் இன்றே விசாரிக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது அவரை ஜாமீனில் விட கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதுஎன்று தெரிகிறது.
இந்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்தால் தான் வீரப்பனைச் சந்திக்க மணி தூதுவராகச் செல்ல முடியும்.
நாகப்பாவை மீட்க கொளத்தூர் மணியை காட்டுக்குள் வரச் சொல்லி வீரப்பன் விதித்த 12 நாள் கெடு கடந்த 2ம் தேதியேமுடிந்துவிட்டது. இந்த கெடுவை நீட்டிக்கக் கோரி கர்நாடக அரசு வீரப்பனுக்கு ரேடியோ மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறது.
இந் நிலையில் நாகப்பா கடத்தப்பட்டு இன்றுடன் 105 நாட்கள் ஆகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-->












Click it and Unblock the Notifications