இலங்கைக்கு பிரவுன் சுகர் கடத்த முயன்ற பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை
சென்னை:
பிரவுன்சுகர் போதைப் பொருளை இலங்கைக்குக் கடத்த முயன்ற பெண்ணுக்கு 15 ஆண்டு கடுங்காவல்தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி சென்னை விமான நிநலையத்தில் ஞானாம்பிகை முத்தையாஎன்ற பெண் போலீஸாரிடம் பிடிபட்டார்.
அவரடமிருந்து 500 கிராம் பிரவுன் சுகர் போதைப் பொருள் பிடிபட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,கொழும்பு நகருக்கு இந்தப் போதைப் பொருளை கடத்த முயன்றதும், அவரது உண்மையான பெயர் ரேகாபரமேஸ்வரி என்றும் தெரிய வந்தது.
ரேகா மீது போதைப் பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவர் மீது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டதால் ரேகாவுக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்துநீதிபதி நசீர் அகமது தீர்ப்பளித்தார்.
-->












Click it and Unblock the Notifications