அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் உண்ணாவிரதம்: போக்குவரத்து பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான போக்குவரத்துறை ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆங்காங்கே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் அரசின்முடிவை எதிர்த்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.

சமீபத்தில் அரசு எடுத்த முடிவின்படி லாபத்தில் இயங்கும் பஸ் வழித் தடங்களை முதலில் தனியார்மயமாக்கப்பட உள்ளன.இதனைக் கண்டித்துத் தான் தலைமைச் செயலாளராக இருந்த சுகவனேஸ்வர் தானே அந்தப் பதவியில் இருந்து விலகிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

நஷ்டத்தில் இயங்கும் வழித் தடங்களை அரசே வைத்துக் கொண்டு லாபத்தில் உள்ள வழித் தடங்களை தனியாருக்கு விற்க முடிவுஎடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியாரிடமிருந்து இதற்காக கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறலாம்என்று தெரிகிறது.

இந் நிலையில் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயாக்குவதைக் கண்டித்து திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்சைச்சேர்ந்த டிரைவர், கண்டக்டர் மற்றும பிற ஊழியர்கள் இன்று தமிழகம் முழுவதுமே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பெண் ஊழியர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய நகர்களில் உள்ள பஸ் டிப்போக்களின் முன்பும் பிற நகரங்களில் முக்கியஇடங்களிலும் இந்தப் போராட்டம் நடந்தது. சுமார் 3,000 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+