For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு: ஜெ. முக்கிய ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட கலெக்டர்கள்,மாவட்ட எஸ்.பிக்களின் மூன்று நாள் மாநாடு நாளை சென்னையில் தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்கு முதல்வர்ஜெயலலிதா தலைமை தாங்குகிறார்.

ஒரே இடத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைமை நிர்வாகிகளும் கூடுவதால் அவர்கள் மீது பயங்கரதாக்குதல் நடக்கலாம் என உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து இந்த மாநாடு நடக்கும் தலைமைச் செயலகத்துக்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தலைமைச் செயலக வளாகத்தில் சுமார் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலக ஊழியர்களே அடையாள அட்டையைக் காட்டினால் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.கோட்டையின் அனைத்து வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்களும் மோப்ப நாய்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

கோட்டையில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள அரங்கத்தில் இந்த 3 நாள் மாநாடுநடக்கிறது. ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு நடைபெறும் 3-வது மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயலலிதா முதல்வரான பிறகு முதல் முறையாக மாநாடு நடந்தது. அதன் பிறகுஇந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. வறட்சி நிலை குறித்து விவாதிப்பதற்காக கலெக்டர்கள் மாநாட்டைஅப்போது முதல்வர் ஜெயலலிதா கூட்டியிருந்தார்.

இப்போதைய மாநாட்டில், பட்ஜெட்டில் ஜெயலலிதா அறிவித்திருந்த தமிழகத்தை முன்னேற்றுவதற்கான 15 அம்சத்திட்டங்கள் குறித்தும், அது அமலாக்கப்பட்ட விதம் குறித்தும் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

முதல் நாளான திங்கள்கிழமை கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டுக் கூட்டம் நடக்கிறது. அடுத்த நாளான10ம் தேதி கலெக்டர்கள் மாநாடும், 11ம் தேதி எஸ்.பிக்களின் மாநாடும் நிடைபெறுகிறது.

மூன்று மாநாடுகளுக்கும் ஜெயலலிதா தலைமை தாங்க உள்ளார்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X