For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் பதுங்கிய தீவிரவாதிகள்: போலீஸ் சுற்றி வளைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இஸ்லாமிய பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த மேலும் 3 தீவிரவாதிகளை போலீஸார் அடையாளம்கண்டுள்ளனர். அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள தெரிவித்தன.

பாபர் மசூதி இடிப்பு நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதியன்று தமிழகத்தில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடத்திட்டமிட்டிருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 9 பேர் மட்டுமே தீவிரவாதிகள் என்பதால்மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

பிடிபட்ட தீவிரவாதிகள கொடுக்க தகவலின்படி ஹைதராபாத்திலும் பெங்களூரிலும் தீவிரவாதிகள்பதுங்கியிருப்பது தெரிந்தது.

இதையடுத்து ஒரு படை பெங்களூர் சென்றது. சென்னை நகர இணை போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுதலைமையில் ஒரு தனிப்படை போலீஸார் ஹைதராபாத் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 3 முக்கிய தீவிரவாதிகளின் இருப்பிடம் குறித்த தகவல்கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க சென்னை போலீசாரின் இன்னொரு படை ஹைதரபாத்விரைந்துள்ளது.

அவர்கள் எந்த நேரமும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X