புது வீராணம் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல்?
வீராணம் ஏரியிலிருந்து சென்னை வரை குழாய் பதிக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டதில் பெரும் ஊழல்நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே 1970களில் திமுக அரசு கொண்டு வந்த இந்த வீராணம் திட்டத்தில் ஊழல் நடந்தாகக் கூறி அத் திட்டமேபல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சி முழுவதும் தூக்கம் போட்ட இந்தத் திட்டத்தைகடந்த முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தூசு தட்டி கையில் எடுத்தார்.
புது வீராணம் திட்டம் என்ற பெயரில் இத் திட்டத்தை அமலாக்கி சென்னை நகருக்கு குடிநீர் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதில் குழாய் பதிப்பதற்கான டெண்டர் விட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகத்தெரிகிறது.
இந்தப் பணிக்காக 2 விதமான குழாய் பதிப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஓங்கூர் ஆற்றிலிருந்துசென்னை அருகே உள்ள போரூர் வரை வரையிலான 115 கிலோமீட்டர் தொலைவுக்கு இரும்புக் குழாய்களைப்பதிப்பதற்கு ஒரு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரை எடுக்க 3 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் டாட்சல் பிரைவேட் லிமிடெட் என்றநிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டது.
ரூ. 255 கோடிக்கு டெண்டர் எடுத்திருந்த அந்த நிறுவனம் திடீரென்று தொகையை ரூ. 377 கோடிக்கு உயர்த்தியது.இதையடுத்து அதன் டெண்டர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நிறுவனத்தை விட குறைவாக கேட்டிருந்த புன்காக் ஹோர்டிங்ஸ் என்ற நிறுவனம் தான்கேட்டிருந்த தொகையை விட ரூ. 40 கோடி உயர்த்திக் கொடுத்தால் இந்தப் பணியை மேற்கொள்வதாகக் கூறியது.
அதே சமயத்தில் 3-வது நிறுவனமான கேமன் இன்டியா நிறுவனம் தனது தொகையை ரூ. 479.99 கோடியிலிருந்துரூ. 360.90 கோடியாக குறைத்தது.
இதையடுத்து மறு டெண்டர் விடப்பட்டது. இந்த முறை கேமன் இன்டியா நிறுவனம் ரூ. 337.19 கோடி கேட்டது.இது அரசு நிர்ணயித்த தொகையைவிட ரூ. 38.97 கோடி அதிகமாகும்.
இருந்தாலும் இந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகபணம் கேட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
முதலில் பணம் கூடுதலாகக் கேட்டதால் தான் டாட்சல் பிரைவேட லிமிட்டெட் நிறுவனத்துக்கு தரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.ஆனால், இப்போது மட்டும் ஏன் மூன்றாவது நிறுவனத்துக்கு அதிக பணம் தர ஒப்புக் கொள்ளப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
இங்கு தான் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-->
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications