புது வீராணம் திட்டத்தில் கோடிக்கணக்கில் ஊழல்?
வீராணம் ஏரியிலிருந்து சென்னை வரை குழாய் பதிக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டதில் பெரும் ஊழல்நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே 1970களில் திமுக அரசு கொண்டு வந்த இந்த வீராணம் திட்டத்தில் ஊழல் நடந்தாகக் கூறி அத் திட்டமேபல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சி முழுவதும் தூக்கம் போட்ட இந்தத் திட்டத்தைகடந்த முறை ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தூசு தட்டி கையில் எடுத்தார்.
புது வீராணம் திட்டம் என்ற பெயரில் இத் திட்டத்தை அமலாக்கி சென்னை நகருக்கு குடிநீர் கொண்டு வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதில் குழாய் பதிப்பதற்கான டெண்டர் விட்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகத்தெரிகிறது.
இந்தப் பணிக்காக 2 விதமான குழாய் பதிப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஓங்கூர் ஆற்றிலிருந்துசென்னை அருகே உள்ள போரூர் வரை வரையிலான 115 கிலோமீட்டர் தொலைவுக்கு இரும்புக் குழாய்களைப்பதிப்பதற்கு ஒரு டெண்டர் விடப்பட்டது.
இந்த டெண்டரை எடுக்க 3 நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் டாட்சல் பிரைவேட் லிமிடெட் என்றநிறுவனத்துக்கு டெண்டர் தரப்பட்டது.
ரூ. 255 கோடிக்கு டெண்டர் எடுத்திருந்த அந்த நிறுவனம் திடீரென்று தொகையை ரூ. 377 கோடிக்கு உயர்த்தியது.இதையடுத்து அதன் டெண்டர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த நிறுவனத்தை விட குறைவாக கேட்டிருந்த புன்காக் ஹோர்டிங்ஸ் என்ற நிறுவனம் தான்கேட்டிருந்த தொகையை விட ரூ. 40 கோடி உயர்த்திக் கொடுத்தால் இந்தப் பணியை மேற்கொள்வதாகக் கூறியது.
அதே சமயத்தில் 3-வது நிறுவனமான கேமன் இன்டியா நிறுவனம் தனது தொகையை ரூ. 479.99 கோடியிலிருந்துரூ. 360.90 கோடியாக குறைத்தது.
இதையடுத்து மறு டெண்டர் விடப்பட்டது. இந்த முறை கேமன் இன்டியா நிறுவனம் ரூ. 337.19 கோடி கேட்டது.இது அரசு நிர்ணயித்த தொகையைவிட ரூ. 38.97 கோடி அதிகமாகும்.
இருந்தாலும் இந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகபணம் கேட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
முதலில் பணம் கூடுதலாகக் கேட்டதால் தான் டாட்சல் பிரைவேட லிமிட்டெட் நிறுவனத்துக்கு தரப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டது.ஆனால், இப்போது மட்டும் ஏன் மூன்றாவது நிறுவனத்துக்கு அதிக பணம் தர ஒப்புக் கொள்ளப்பட்டது என்பது புரியாத புதிராக உள்ளது.
இங்கு தான் அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications