கார்-லாரி மோதல்: 3 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
பெங்களூரிலிருந்து சபரிமலைக்கு சென்று கொண்டிருந்த 3 ஐயப்ப பக்தர்கள் ஈரோடு அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் பலியாயினர்.
பெங்களூரைச் சேர்ந்த மூன்று ஐயப்ப பக்தர்கள் காரில் சபரிமலைக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
ஈரோடு அருகே கங்காபுரம் என்ற இடத்தில் வந்தபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த காரை அவர்கள் முந்தமுயன்றனர்.
அப்போது எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த லாரியுடன் ஐயப்ப பக்தர்கள் வந்த கார் பலமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று ஐயப்ப பக்தர்களும் உடல்நசுங்கி பலியாயினர்.
அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. சித்தோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-->












Click it and Unblock the Notifications