திருட்டுக் கார்களை விற்ற 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற மாநிலங்களிலிருந்து கார்களைக் கடத்தி வந்து சென்னையில் விற்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, புரோக்கர் மணி என்பவர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார்சமீபத்தில் கைது செய்தனர்.
அவர்களிடம் நடந்த விசாரணையின்போது, வெளியூர்களிலிருந்து கடத்தி சென்னைக்குக் கொண்டு வரப்படும்கார்களை வாங்கி விற்பனை செய்வதே அவர்களுக்குத் தொழில் என்று தெரிய வந்தது.
ரமேஷ்குமார் என்பவர்தான் மும்பை உள்ளிட்ட பிற மாநில நகரங்களிலிருந்து கார்களைத் திருடி, சென்னைகொண்டு வந்து இவர்களிடம் விற்பது தெரிய வந்தது. இதையடுத்து ரமேஷ் குமாரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-->












Click it and Unblock the Notifications