For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடக எல்லையில் தேவாரம் தலைமையில் அதிரடிப்படை வேட்டை

By Super
Google Oneindia Tamil News

சேலம்:

தமிழ்நாடு அதிரடிப்படை தலைவர் வால்டர் தேவாரம் தலைமையில் தமிழக அதிரடிப்படையினர் காட்டில் கர்நாடகஎல்லைப் பகுதியை ஒட்டி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பா கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து கர்நாடக அதிரடிப்படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவே காட்டுக்குள்புகுந்து வீரப்பனைத் தேடி வருகின்றனர். இதனால் அவன் தமிழக எல்லையில் நுழைய நிறைய வாய்ப்புள்ளது.

இதனால் சத்தியமங்கலம் வனப் பகுதியில் உள்ள அதிரடிப்படை முகாமில் தமிழக அதிரடிப்படை தலைவர்தேவாரம் தலைமையில் தமிழக அதிரடிப்படை அதிகாரிகள் திங்கள்கிழமை காலை முக்கிய ஆலோசனைநடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப்படை வீரர்கள் காட்டுக்குள் கர்நாடக எல்லையை ஒட்டிதேடுதல் வேட்டையில் இறங்கினர். நாகப்பா கடத்தலையடுத்து இந்தப் பகுதிகளில் தமிழக அதிரடிப்படை நுழையதடை விதிக்கப்பட்டிருந்தது.

திம்மம், பன்னாரி,கோபிநித்தம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான தமிழக அதிரடிப்படை வீரர்கள்தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

வீரப்பனின் சொந்த கிராமமான கோபிநத்தம் பகுதியில் வீடு வீடாக போலீஸார் சோதனை போட்டு விசாரணைநடத்தி வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியிலும் அதிரடிப்படை போலீஸார் அதிகஅளவில் குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தேவாரத்தை சந்திக்க அதிகாரி விரைவு:

வீரப்பனை பிடிப்பது குறித்து விவாதிக்க தமிழக அதிரடிப்படையின் தலைவர் தேவாரத்தை சந்திக்க கர்நாடகமுதல்வரின் பாதுகாப்பு ஆலோசகர் சீனிவாசுலு கோயம்புத்தூர் விரைந்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக இரு மாநில அதிகாரிகளும் ஆலோசனைகளைக் கூட நிறுத்தியிருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X