"இலங்கை சிறைகளிலிருந்து 63 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை"

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுஅந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 63 தமிழக மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில்,

தமிழகத்தைச் சேர்ந்த 63 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடி வருகின்றனர். இதுதவிர 19 படகுகளும் இலங்கைகடற்படை வீரர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவர்களை மீட்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மீன்வளத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்தலைமையில் உயர் மட்டக் குழுவை முதல்வர் ஜெயலலிதா அமைத்திருந்தார்.

இவர்களை மீட்பது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் அவர்கள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்படுவார்கள் என்று இந்தியத் தூதரகத்திலிருந்து அமைச்சர்ராதாகிருஷ்ணனுக்கு தகவல் வந்துள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+