For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நக்சலைட்டுகளை ஒடுக்க 500 சிறப்பு போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க 500 பேர் கொண்ட தனிப்போலீஸ் படை நிரந்தரமாக அமைக்கப்படவுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் சமீப காலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் பெருகி விட்டது. சமீபத்தில் போலீஸார்மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஒரு நக்சலைட் கொல்லப்பட்டார். மேலும் 26 பேர் பிடிபட்டனர். தொடர்ந்துநக்சலைட் வேட்டை நடந்து வருகிறது.

இதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைமுடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது500 பேர் கொண்ட காவல் படையை தர்மபுரி மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்புக் காவல் படையில் காவல்துறைக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர்கள்,இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர் என்று தெரிகிறது.

இந்த சிறப்புப் படை அமைவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அரசிடம் தெரிவிக்கப்படும். அரசு ஒப்புதல்கிடைத்தவுடன் சிறப்பு படைப் பிரிவு அமைக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X