தீவிரவாதிகள் அடக்கி ஒழிக்கப்படுவார்கள்: ஜெ. சூளுரை
சென்னை:
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வந்தாலும், அவர்கள் அடக்கி ஒழிக்கப்படுவார்கள் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 3 நாள் மாநாடு தலைமைச் செயலகத்தில்உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் நடந்தது.
அதில் ஜெயலலிதா பேசுகையில், தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு தீவிரவாதத்துக்கும் அனுமதி இல்லை.
அவர்களது நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். முளையிலேயே கிள்ளி எறியப்படுவார்கள்.தீவிரவாதிகள் நிடமாட்டம் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் கொடுக்கும் தகவல்களை ஒருங்கிணைத்துகாவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதிகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம் என்பதற்கு சமீபத்திய தர்மபுரி நிக்சலைட் விவகாரம்சரியான உதாரணம்.
அவர்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அடக்கி, ஒடுக்கப்படுவார்கள் என்பதற்கு தர்மபுரியில் போலீஸார்மேற்கொண்ட நக்சலைட் வேட்டை தான் சாட்சி.
தீவிரவாதிகள், சமூக விரோதிகளின் நடமாட்டம், அவர்கள் எங்கு, எப்படி உருவாகிறார்கள் போன்றவை குறித்துகாவல்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் முன் காப்போம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தமிழக காவல்துறையை நவீனமயமாக்க கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 272 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே நம்பர் ஒன் போலீஸார் என்ற பெயரை தமிழக போலீஸார் என்ற பெற முயற்சிக்க வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை காவலர்களை நேரில் அழைத்து குறைகள் கேட்டுள்ளேன். அதுபோல உயர்அதிகாரிகளும் செயல்பட்டு தங்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களின் குறைகளைக் களைய வேண்டும்.
15 அம்சத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மையான மாநிலமாக்கமாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள்பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.
நாளை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடும், மறுநாள் காவல்துறை அதிகாரிகள் மாநாடும் நடைபெறவுள்ளது.
முதலில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாடும் நாளை காவல்துறை அதிகாரிகள் மாநாடும் நடப்பதாக இருந்தது.ஆனால், நாகப்பா கொலையால் கர்நாடக எல்லைப் பகுதியில் எழுந்துள்ள சட்டம் ஒழுங்கு விவகாரத்தையடுத்துஇவை ஒத்தி வைக்கப்பட்டன.
-->












Click it and Unblock the Notifications