For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காடுவெட்டி குருவை காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

செங்கல்வராயன் அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக நீதிமன்றக் காவலில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிஎம்.எல்.ஏ. காடுவெட்டி குருவை போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செங்கல்வராயன் அறக்கட்டளை நிர்வாகியாக பொறுப்பேற்றகச் சென்ற ஓய்வு பெற்ற நீதிபதி தங்கமணியைபா.ம.கவினரும் வன்னியர் சங்கத்தினரும் தாக்கினர்.

அவரை ஜாதியின் பெயரைச் சொல்லித் திட்டினர். அந்த வழக்கில் பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குருஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சமீபத்தில் சரணடைந்த காடுவெட்டி குரு எம்.எல்.ஏவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதிக்கக் கோரி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வேப்பேரி போலீஸார் மனுத்தாக்கல்செய்துள்ளனர்.

ஜி.கே.மணியை சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சிறையிலேயே வைத்து விசாரிக்க ஏற்கனவேபோலீஸாருக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

காடுவெட்டி குருவை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கிடைத்தால் அவர் சிறையில் இருந்து காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்.

அங்கு அவருக்கு லாடம் கட்டப்பட்டு போலீஸ் ஸ்டைலில் விசாரணை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X