"காவிரிக்கு தீர்வு ஏற்பட்டால் தான் வீராணம் திட்டம் சாத்தியம்"
திருச்சி:
காவிரிப் பிரச்சினை தீராதவரை புது வீராணம் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
காவிரியில் வரும் நீர் வீராணம் ஏரிக்கு வந்தால்தான் அது நிரம்பும். ஆனால் இப்போதோ காவிரியிலேயே நீர்இல்லை. எனவே காவிரிப் பிரச்சினை தீர்ந்தால்தான் வீராணம் திட்டத்தைப் பற்றி சிந்திக்க முடியும்.
அதை விட்டு, உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.500 கோடி கடன் பெற்று புது வீராணம் திட்டத்தைஅமல்படுத்த அரசு முயற்சிப்பது சரியான செயலாக அமையாது. முதலில் காவிரிப் பிரச்சினையை அரசு தீர்க்கமுயற்சிக்க வேண்டும்.
அரசு பஸ்களை தனியார் வசம் ஒப்படைப்பது சரியான நடவடிக்கை அல்ல. இதனால் பொதுமக்களின் நலன்தான்பாதிக்கப்படும். பஸ் ரூட்களை தனியாருக்கு விற்பதில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இந்தமுடிவை வாபஸ் பெற வேண்டும் என்றார் நல்லகண்ணு.
-->












Click it and Unblock the Notifications