கோவை போலீஸ்காரர் கொலை வழக்கு: 20ம் தேதி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோயம்பத்தூரில் போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை சம்பவம் தொடர்பான வழக்கில் வருகிற 20ம் தேதி தீர்ப்புவழங்கப்படவுள்ளது.

கோயம்பத்தூர் நகரில் பெரும் கலவரம் ஏற்பட காரணமாக அமைந்த காவலர் செல்வராஜ் கொலை வழக்கைஇரண்டாவது விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டது. வரும் 20 ம் தேதிதீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி இரவு சிலரால் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்துகோகோயம்பத்தூரில் பெரும் கலவரம் வெடித்தது.

அடுத்த சில நாட்களிலேயே குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் 1998ம் ஆண்டு கோயம்பத்தூர் நகரின் பல்வேறுபகுதிகளில் வெடிகுண்டுகளை வெடித்தனர். இதில் 58 பேர் வரை பலியானார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூட அந்த தொடர் வெடிகுண்டு விபத்துக்களிலிருந்து அவர்அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

செல்வராஜ் கொலை வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிராக 35 சாட்சியங்கள்விசாரிக்கப்பட்டனர்.

இதையடுத்து செல்வராஜ் கொலை வழக்கில் வரும் 20ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளதையடுத்து கோயம்பத்தூர்முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+