நெல்லை, தூத்துக்குடியில் வயிற்றுப் போக்கு: 10 பேர் பலி- மக்கள் பீதி
திருநெல்வேலி:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வயிற்றுப் போக்கு காரணமாக கடந்த 2நாட்களில் மட்டும் 10 பேர் வரை இறந்துள்ளனர். மேலும் 50 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். இதையடுத்து அப்பகுதி மக்களிடையே கடும் பீதி கிளம்பியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள்கடந்த இரண்டு நாட்களாக திடீர் வயிற்றுப் போக்கினால் கடுமையாக அவதிப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஏழு பேர் உயிரிழந்ததையடுத்து, அந்தக் கிராமங்களில் பெரும் பீதிஏற்பட்டது. இவர்களைத் தவிர மேலும் ஆறு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிருக்குப் போராடிவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் டி. சண்முகாபுரத்தில் மூன்று பேர் வயிற்றுப் போக்கு காரணமாகதிடீரென்று இறந்தனர். மேலும் 44 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் இந்த இரு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் மத்தியில் திடீர் பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.அசுத்தமான தண்ணீரைக் குடித்ததாலேயே இந்தத் திடீர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நலத் துறை அதிகாரிகளும், டாக்டர்களும் விரைந்துள்ளனர். பல்வேறுகிராமங்களிலும் முகாமிட்ட அவர்கள் மக்களுக்குத் தடுப்பு மருந்துகளை அளிக்கும் பணிகளையும்துவக்கியுள்ளனர்.
தண்ணீரை காய்ச்சி வடித்து குடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-->