""ஒரே வாரத்தில் வீரப்பனை பிடிப்பேன்"": சு. சுவாமி சவால்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பொறுப்பை அரசு என்னிடம் கொடுத்தால் ஒரே வாரத்தில் அவனைப்பிடித்துக் காட்டுவேன் என்ற ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
எப்போதுமே அதிரடி அறிவிப்புகளை வெளியிடுவதில் சுவாமியை மிஞ்ச யாரும் இல்லை. பல்வேறு தடாலடிசெய்திகளை வெளியிடுவதில் நிபுணரான சுவாமி, இப்போது இன்னொரு தடாலடி செய்தியை வெளியிட்டுள்ளார்.சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் படுகொலையில் வீரப்பன் தவிர விடுதலைப் புலிகளுக்கும், கர்நாடககாங்கிரசுக்கும் தொடர்பு உண்டு.
இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் கிருஷ்ணா உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
கூட்டு அதிரடிப்படையின் தலைவரான தேவாரத்தால் வீரப்பனைப் பிடிக்கவே முடியாது. அந்தப் பணியைஎன்னிடம் ஒப்படைத்தால் ஒரே வாரத்தில் அவனைப் பிடித்துக் காட்டுகிறேன்.
தென்னக நதிகள் இணைப்பு தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை நடிகர் ரஜினிகாந்த்திடம் விரைவில்அளிக்கவுள்ளேன்.
பாகிஸ்தானுக்கு வருமாறு அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின் அழைப்பை ஏற்று அடுத்தமாதம் அங்கு நான் செல்கிறேன் என்றார் சுவாமி.
-->