கேரள காட்டுக்குள் வீரப்பன் தப்பி ஓட்டம்?
சென்னை:
நாகப்பா படுகொலைக்குப் பிறகு தமிழ காட்டுக்குள் தப்பி வந்து விட்டதாக கூறப்பட்ட வீரப்பன் தற்போது கேரளகாட்டுக்குள் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
நாகப்பா மர்ம சாவுக்குப் பிறகு வீரப்பன் மற்றும் அவனது கும்பல் தமிழக காட்டுப் பகுதிக்குள் வந்து விட்டதாகக்கூறப்பட்டது.
இதையடுத்து பர்கூர், அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி பவானி சாகர் உள்ளிட்ட பல்வேறு மலை மற்றும்காட்டுப் பகுதிகளில் தீவிர வேட்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், கேரள காட்டுப் பகுதிக்குள் வீரப்பன் தப்பியிருக்கலாம் என்று ஒரு தகவல் வந்துள்ளது. இதையடுத்துகேரள காட்டுப் பகுதிகளில் பலத்த கண்காணிப்புப் பணியை கேரள போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
வாலையார் காட்டுப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரள எல்லைகளில்அமைந்துள்ள காட்டுப் பகுதிகள் முழுவதிலும் கேரளப் போலீசார் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, வீரப்பனைப் பிடிக்க தமிழக, கர்நாடக போலீஸாரே போதும், ராணுவம் தேவையில்லை என்றுகூட்டு அதிரடிப்படைத் தலைவர் வால்டர் தேவாரம் கூறியுள்ளார். வீரப்பனைப் பிடிக்காமல் ஓய மாட்டோம்,விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் முறையாக அதிரடிப்படை வீரர்களுக்கு கிராமத்து மக்களின் உதவி அபரிமிதமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸாருக்கு பல்வேறு முக்கியத் தகவல்களை கிராமத்து மக்கள் அளித்துவருவதாகவும், போலீஸாருக்கு உதவியாக சில கிராமத்தினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும்கூறப்படுகிறது.
கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட காட்டுப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
-->